tet books

time


follow me on fb

Wednesday, February 27, 2013

TNTET 2013 EXAM DATE - பரவும் புரளி குருஞ்செய்திகள்...

சமூகத்தில் புரளிகளுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உள்ளது என்பது உண்மைதான்.

அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது  கிடையாது போல...

அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..



ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
ONLINE APPLY DATE :- 13.03.2013   - 23.4.2013
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION  
D.TEd - 2639 
TAMIL - 891
 ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530 

என்று தட்டி விட்டிருக்கிறார்கள் யாரோ..


இது புரளி என்பதற்கான காரணங்கள்...
ஆன்லைனில் பதிவு செய்வதால்  இடையில்  இரண்டு மாத இடைவெளி என்பது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடும்.

குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு நாள் சென்ற ஆண்டு TET தேர்விற்காக ஒதுக்கப்பட்ட தேர்வு நாளுடன் ஒத்து வருகிறது..

சமூக அறிவியல் பாடத்திற்குதான் இருப்பதிலேயே அதிக ஆசிரியர்கள் தேவை உள்ளதாக இதற்கு முன்னர் அதிகார பூர்வமான செய்திகள் வெளி வந்துள்ளது..

எனவே இந்த குறுஞ்செய்தியை நம்பவேண்டாம் எனவும்..

அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் வரை காத்திருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

முடிந்தவரை மே மாதம் இறுதிக்குள்ளாக தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளே வெளியாகும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்து...

2 comments:

  1. முதுகலை ஆசிரியர்களுக்குமார்ச் 5 ல் கவுன்சிலிங்
    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.
    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும், கூடுதல் காலி பணியிடங்களையும் கணக்கிட்டு, இரண்டாவது தேர்வு பட்டியல், கடந்த ஜனவரி 18ல் வெளியிடப்பட்டது.
    இதில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, பிப்.,20 ல் கவுன்சிலிங் நடந்தது. பள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில், மார்ச் 5 ல் கலந்தாய்வு நடக்கிறது. அன்று காலையில், அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், மதியம் பிற மாவட்டங்களுக்குள்ளும் கலந்தாய்வு நடக்கிறது.தேர்வு செய்யப்பட்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links