tet books

time


follow me on fb

Saturday, February 2, 2013

உயர்கிறது ஆசிரியர்கள் தேவை எண்ணிக்கை.... ஜீன் மாதத்திற்குள் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு

ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர்
இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக,15 ஆயிரம் ஆசிரியர்களை,
புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.
கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரிஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை,12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்குமீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது.
ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில்,இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன்மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.
புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.



ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி 


சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது.தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாகநடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.
இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார். 

5 comments:

  1. ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி

    சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
    ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது.தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
    இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.
    இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாகநடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.
    இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.
    மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
    ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

    ReplyDelete
  2. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 பேராசிரியர்கள் நியமனம்: முறைகேடுகளைத் தடுக்க போட்டித்தேர்வு வேண்டும்: விரிவுரையாளர்கள் கோரிக்கை

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று விரிவுரையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்வலியுறுத்தினர்.
    இப்போதுள்ள முறையின் படி நேர்முகத் தேர்வுக்கும், அனுபவத்துக்கும் அதிக மதிப்பெண் இருப்பதால் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    புதிய முறையில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்), மாநில விரிவுரையாளர்தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர்.
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்க நிலையில், இந்தத் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகமான காலிப்பணியிடங்கள் இருந்ததால் அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய தேர்வு முறையை தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் அரசுக்குப் பரிந்துரை செய்தது.
    அதன்படி, பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி பட்டத்துக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
    பி.எச்டி. பட்டம் பெறாமல் எம்.பில். பட்டத்துடன் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்ணும், தகுதித் தேர்வுகளில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
    அரசுக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்வு முறையால் தரமான ஆசிரியர்கள் அதிகம் தேர்வாகவில்லை என தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் கோ.க.பழனி கூறினார்.
    இந்த மதிப்பெண் முறையால் நெட், ஸ்லெட் (செட்) தேர்வுகளில் தகுதி பெற்றவர்களும் அதிகமான அளவில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு பெறவில்லை. நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் அனுபவச் சான்றிதழ் போன்றவற்றால் நிறைய பேர் தேர்வானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
    சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் பெற்றுக்கொண்டு போலியான அனுபவச் சான்றிதழ்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், புத்தகம் வெளியிட்டிருந்தால் மதிப்பெண் என்ற பிரிவுஇருந்தது. இதற்காகவும் நிறைய பேர் பணம் செலுத்தி புத்தகம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
    இந்த காரணங்களால் புதிய மதிப்பெண் முறையை பரிந்துரைத்த தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகமே அதை எடுத்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துமாறு அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.
    ஆனால், அந்தப் பரிந்துரை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று விரிவுரையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதில் போட்டித் தேர்வு மதிப்பெண்ணோடு, அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், உயர் கல்விக்கு 8 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் விரிவுரையாளர்களை நியமிக்க இதுவே சிறந்த வழிமுறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
    கடந்த 2009-10-ம் ஆண்டில் 1,022 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக ஊழல் கண்காணிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    நெட், செட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள பி.எச்டி. மாணவரான வேல்முருகன் கூறும்போது,"இப்போதுள்ள தேர்வு முறையில் இளைஞர்களும், தகுதியானவர்களும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. தகுதித் தேர்வுகளுக்கும், இதில் பெறும் மதிப்பெண்ணுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
    நியாயமாக தேர்வு செய்தால் போதும்: ஏற்கெனவேநெட், செட் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு வைக்கக் கூடாது. இப்போதுள்ள மதிப்பெண் முறைகளைப் பின்பற்றி, விரிவுரையாளர் நியமனத்தை நேர்மையாக நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பிச்சாண்டி கூறினார்.


    நெட், செட் தேர்வுகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் தேர்வு பெறுவதால் மற்றுமொரு தேர்வை வைத்தால் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 21 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டபோதும் முறைகேடு புகார்கள் எழவில்லை. ஆனால், இப்போதுள்ள முறையில் 1,063உதவிப் பேராசிரியர்கள் நியமனம் நடைபெற்றால் முறைகேடுகள் நடைபெறும் என்கிறஅச்சம் தகுதியானவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. முதலில் வேலை, பின்னர் தகுதித்தேர்வு பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எல்.ஏ ஆபீசில் மனு
    தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஊழியரிடம் மனு அளித்தனர். அதில், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஆசிரியர் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட் டாய கல்வி உரி மைச் சட்டத்தில் தகு தித் தேர்வு தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் அனுமதியளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்து விட்டு, ஐந்து ஆண்டுகளில் அவர் களை தகுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண் டும். இதற்கு முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    இது குறித்து சங்க தலைவர் சுந்தர் கூறுகையில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படியான தகுதித் தேர் வை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருப்போருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பணி நியமனம் பெற்ற 5 ஆண்டுகளில் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, பணி நியமனம் கிடைக் கும் என்று காத்திருக்கும் பல்லாயிரம் பேருக்கு நம்பிக்கை ஏற்படும். இதற்காக மனு கொடுத்துள்ளோம் என்றார்.

    ReplyDelete
  4. பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்
    வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார்.
    இந்த அமைப்பின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
    கூட்டத்தில் சங்க மாநிலப்பொதுச்செயலர் கூறியது: வரும்20,21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    வரும் 20,21ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு அளவில் பங்கேற்க உள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
    பொது வேலை நிறுத்தத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்,புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவும், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறவும், தன் பங்கேற்புத்திட்டத்தைக் கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும் வலியுறுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத சந்தா தொகையை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என்றார்.
    மாநிலச் செயலாளர் வின்சென்ட், மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன், மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ReplyDelete
  5. முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி.,"பகீர்' தகவல்
    முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.
    தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு,அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான,
    தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.
    உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களைஅறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.
    இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links