tet books

time


follow me on fb

Tuesday, May 29, 2012

check your application Status for TET 2012

தங்களின் விவரங்கனை கீழே கொடுக்கப்பட்ட லிங்குகளை கிளிக் செய்து அதில் உங்கள் அப்ளிகேஷன் எண்ணை (எண்ணிற்கு முன் 0 சேர்க்கவும்) உள்ளிட்டு தங்களின் விவரங்கள் சரியா? என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்... இது TRB website ல் விடப்பட்டு உள்ளது.


http://trb.tn.nic.in/TET2012/28052012/msg.htm



http://trb.tn.nic.in/TET2012/28052012/status.asp






Monday, May 28, 2012

TET தேதியில் திடீர் அதிகாரபூர்வ மாற்றம்...



ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேதி சூலை மாதம் 12 ஆம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது ... இதற்கான அறிவிப்பு இன்று 28/05/2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுத உள்ள இத்தேர்விற்கான காலம் B.Ed தேர்வுகள் நடப்பதாலும் , Hall ticket வழங்க போதுமான காலம் இல்லாத காரணத்தாலும் சூன் 3 ஆம் தேதியில் இருந்து சூலை 12  ஆம் தேதி (வியாழன் கிழமை) க்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன..



இதற்கான செய்திக் குறிப்பு இங்கே...



  1. Teachers Recruitment Board has issued notification dated 7.3.2012 for the conduct of Teacher Eligibility Test on 03.06.2012. All administrative arrangements are put in place to conduct the Teacher Eligibility Test. In the meantime, many representations have been received by the Government and Teachers Recruitment Board. The candidates have represented that the schedule prescribed does not ensure sufficient time for preparation. Moreover same set of candidates have to write many other recruitment examinations during the same period and this is causing much stress. Therefore they have been representing for suitable postponement of Teacher Eligibility Test. In view of this, Teachers Recruitment Board has decided to postpone the Teacher Eligibility Test to 12.7.2012. To ensure this, Government have also decided to make special arrangements for the smooth conduct of Teacher Eligibility Test on a working day.
  2. Representations have also been received with regard to the lack of clarity on "candidates not required to write Teacher Eligibility Test". The following candidates are not required to write Teacher Eligibility Test
    1. All appointments made prior to the date of Notification issued by the National Council for Teacher Education (NCTE) i.e. 23.8.2010.
    2. Appointments made based on the advertisement issued before 23.8.2010 and appointment orders issued after 23.8.2010.
    3. Appointments made based on the Certificate Verification (CV) conducted before 23.8.2010 and appointment orders issued after 23.8.2010.
  3. The list of candidates who have applied for Teacher Eligibility Test is being hosted in the Teachers Recruitment Board Website. (http://trb.tn.nic.in) Candidates who need further clarification may approach Teachers Recruitment Board with Xerox copy of their application forms and bank challan for the fees paid.


CHAIRMAN.

Monday, May 21, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் மாற்றமில்லை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

வரும் ஜீன் மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை TET எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும் என்று தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துகள்ளது...

இது பலருக்கு ஏமாற்றத்தினையும் ஒரு மாதம் வரை தள்ளி போகும் என்று எதிர்பார்த்த தற்போது B.Ed படிக்கும் மாணவர்களுக்கு கடும் மன இறுக்கத்தினையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து இந்த தேர்வினை எழுத வேண்டியதுதான் போல் தெரிகிறது...

உங்கள் கருத்து என்ன?

தங்களால் முடிந்த பங்களிப்பினை இந்த வலைப்பூவிற்கு செய்ய jagan.nathan801@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் கற்பித்தல் குறிப்புகளை அனுப்பி வைக்கவும்.

நாமும் வெல்வோம்... நம் நண்பர்களையும் வெல்லச் செய்வோம்...

எ்ன்றும் நட்புடன்... tntet2012.blogspot.com நிர்வாகி Jaganathan. R (9894016112)

face book ( jackn nath)
உளவியல் பாடக்குறிப்புகளில் சில....

Saturday, May 12, 2012

TET அனைத்து பாடக்குறிப்புகள்


குறைந்தது 1 Mb அளவிற்காவது இந்த பக்கம் பதிவிறக்கமாகும் என்பதால் சிறிது நேரம் காத்திருக்கவும்...

Saturday, May 5, 2012

தமிழ் சங்க இலக்கிய வகைப்பாடு



பதினெண் மேற்கணக்கு


எட்டுத்தொகை

  1. ஐங்குறுநூறு
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. கலித்தொகை
  5. குறுந்தொகை
  6. நற்றிணை
  7. பரிபாடல்
  8. பதிற்றுப்பத்து

பத்துப்பாட்டு

  1. திருமுருகாற்றுப்படை
  2. குறிஞ்சிப் பாட்டு
  3. மலைபடுகடாம்
  4. மதுரைக் காஞ்சி
  5. முல்லைப் பாட்டு
  6. நெடுநல்வாடை
  7. பட்டினப் பாலை
  8. பெரும்பாணாற்றுப்படை
  9. பொருநர் ஆற்றுப்படை
  10. சிறுபாணாற்றுப்படை

பதினெண் கீழ்க்கணக்கு


  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. கார் நாற்பது
  6. களவழி நாற்பது
  7. ஐந்திணை ஐம்பது
  8. திணைமொழி ஐம்பது
  9. ஐந்திணை எழுபது
  10. திணைமாலை நூற்றைம்பது
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. முதுமொழிக்காஞ்சி
  17. ஏலாதி
  18. கைந்நிலை

ஐம்பெருங்காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி
  5. சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்

  1. உதயணகுமார காவியம்
  2. நாககுமார காவியம்
  3. யசோதர காவியம்
  4. சூளாமணி
  5. நீலகேசி


Wednesday, May 2, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழ் சில வினா விடைகள்



கடந்த மூன்று வாரங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப் பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப் பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும் மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி 60% மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய நிலை. அவர்களுக்காகவே தமிழ் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கி வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்.

*  சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
*  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
*  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
*  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
*  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
*  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
*  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
*  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
*  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
*  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
*  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
*  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16
*  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
*  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
*  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
*  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
*  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
*  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
*  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
*  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
*  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
*  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
*  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
*  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
*  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
*  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
*  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
*  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
*  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
*  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
*  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
*  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல
*  காராளர் என்பவர் - உழவர்
*  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்
*  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
*  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
*  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
*  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
*  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
*  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
*  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
*  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
*  திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
*  பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
*  மதுரை என்பது - இடப் பெயர்
*  மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது -  தெற்குகோபுரம்
*  பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது -  முத்து
*  மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் -  செல்லத்தம்மன் கோயில்
*  நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
*  மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
*  மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
*  பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
*  மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
*  மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
*  மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
*  சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
*  முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
*  இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
*  நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் -   பம்மல் சம்பந்தனார்
*  மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
*  தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
*  தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
*  உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
*  உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -  கலீலியோ
*  "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
*  உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
*  ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
*  திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
*  திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
*  உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
*  நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12
*  அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
*  தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன  -   புராணக்கதைகள்
*  குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
*  ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
*  மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் -  மகோந்திரவர்ம பல்லவன்
*  மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் -  கி.பி. 7
*  நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
*  தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
*  கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது -  அடியார்க்கு நல்லார்
*  நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
*  மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
*  திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
*  அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
*  நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்  -  72
*  சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
*  அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது  -   முதுமொழிக்காஞ்சி
*  முதுமொழிக் காஞ்சியில் உள்ள  பாடல்களின் எண்ணிக்கை - 100
*  மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
*  நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் -  மோசிக்கீரனார்
*  முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
*  முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
*  கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
*   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
*  வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
*  "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
*  "பால் பற்றி செல்லா விடுதலும்"  என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
*  காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
*  சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
*  ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
*  ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து
*  ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் -   0
*  ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
*  பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம்  -   சென்னை
*  ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919
*  கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887
*  கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு
*  ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்
*  ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் -  ஹார்டி
*  ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் -   ஈ.டி.பெல்

*  மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை
*  ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்
*  திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
*  தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
*  ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்
*  இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை
*  மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு -  இடம் என்று பெயர்
*  ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் -  பன்மை
*  பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்
*  பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்
*  ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை
*  எண் எத்தனை வகைப்படும் - இரண்டு
*  ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை
*  மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு -  உயர்திணை
*  அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை
*  செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு  உயிரளபெடை என்று பெயர்
*  திணை என்பது - ஒழுக்கம்
*  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
*  சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ
*  சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ
*  சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் -  எ, யா, ஏ
*  வினா எழுத்துக்கள் - 5
*  சுட்டெழுத்துக்கள் - 3
*  பால் - 5
*  பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
*  ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு
*  பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும்  5 பால்களாக பிரிக்கலாம்
*  திணை - 2 வகை
*  நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
 *  ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு
*  மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் -    அஃறிணை

உவமையால் விளக்கப்படும் பொருள்
*  தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
*  இலைமறை காய் போல் - மறைபொருள்
*  மழைமுகம் காணாப் பயிர் போல -  வாட்டம்
*  விழலுக்கு இறைத்த நீர் போல  - பயனற்றது
*  சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல   -  மிக்க மகிழ்வு
*  உடுக்கை இழந்தவன் கை போல  - நட்புக்கு உதவுபவன்
*  மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல  - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
*  இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
*  குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
*  வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
*  வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
*  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  - சான்றாண்மை
*  சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
*  அனலில் விழுந்த புழுப்போல    -    தவிர்ப்பு
*  கண்ணைக் காக்கும் இமை போல  -  பாதுகாப்பு
*  நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை  -  நிலையாமை
*  உமி குற்றிக் கைவருந்தல் போல  -     பயனற்ற செயல்
*  பல துளி பெருவெள்ளம் -  சேமிப்பு
*  நத்தைக்குள் முத்துப் போல -  மேன்மை
*  ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
*  பூவோடு சேர்ந்த நார் போல -  உயர்வு
*  நாண் அறுந்த வில் போல -  பயனின்மை
*  மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
*  தாயைக் கம்ட சேயைப் போல   -   மகிழ்ச்சி
*  சிறகு இழந்த பறவை போல  -  கொடுமை
*  மழை காணாப் பயிர் போல  - வறட்சி
*  நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
*  இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
*  திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  பெரியபுராணம்
*  இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
*  வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
*  விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்

பொருத்துக
*  வாரி - கடல்
*  கலிங்கம் - ஆடை
*  வயமா - குதிரை
*  புலம் - அறிவு
*  ஐயை - தாய்
*  செறிவு - அடக்கம்
*  இகல் - பகை
*  நகம் - மலை
*  வெச்சி - நிரை கவர்தல்
*  கரந்தை - நிரை மீட்டல்
*  நொச்சி - எயில் காத்தல்
*  வாகை - போரில் வெற்றி
*  வாள் - உயர்ந்த
*  பராவி - வணங்கி
*  கழனி -  வயல்
*  தொன்மை -   பழமை
*  பரி - குதிரை
*  அரி - சிங்கம்
*  மறி - ஆடு
*  கரி - யானை
*  பாரி -கபிலர்
*  அதியமான் - ஒளவையார்
*  கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
*  குமணன் -பெருஞ்சித்தனார்
*  சுரத்தல் - பெய்தல்
*  உள்ளம் - ஊக்கம்
*  வேலை - கடல்
*  நல்குரவு - வறுமை

*  முப்பால் - திருக்குறள்
*  தொல்காப்பியம் - தொல்காப்பியர்
*  மகாபாரதம் -  வியாசர்
*  தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
*  வீரசோழியம் -  அமிர்தசாகரர்
*  நேமிநாதம் -  குணவீர பண்டிதர்
*  நன்னூல்  - பவணந்தி முனிவர்
*  உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
*  முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  ஈரடி வெண்பா  -  திருக்குறள்
*  தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
*  திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
*  இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
*  கவிக்குயில் - சரோஜினிநாயுடு
*  காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
*  புதுவைக்குயில் - பாரதிதாசன்
*  யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
*  நம்மாழ்வார் - திருவாய்மொழி
*  சமணமுனிவர் - திருப்பாமாலை
*  கண்ணதாசன் - இயேசுகாவியம்
*  உமறுப்புலவர் - சீறாப்புரணம்
*  பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
*  புறம்பு நானுறு - புறநானூறு
*  திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
*  வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
*  வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
*  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
*  மருள் நீக்கியார் - அப்பர்
*  கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
*  முடியரசன் - பூங்கொடி
*  சிற்பி - நிலவுப்பூ
*  நா.காமராசன் - சூரியகாந்தி
*  பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு
*  பாஞ்சாலி சபதம் - பாரதியார்
*  பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
*  அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
*  கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
*  திருவாசகம் - மாணிக்கவாசகர்
*  திருப்பாவை - ஆண்டாள்
*  பெண்ணின் பெருமை - திரு.வி.க.
*  தேவாரம் - திருஞானசம்பந்தர்
*  முக்குடற்பள்ளு -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை
*  பழமொழி - முன்றுறையரையனார்
*  இருண்ட வீடு - பாரதிதாசன்
*  ஏலாதி - கணிமேதாவியார்.

 1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்

2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31
3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா
4. குறிஞ்சிப்பாட்டு எந்த இலக்கியத்தை சேர்ந்தது - சங்க இலக்கியம்
5. நன் கணியர் என்றால் - மிகவும் நெருங்கிருப்பவர்
6. குழந்தைகள் அமைதி நினைவாலயம் கட்டியவர் - சடகோ சாசாகி
7.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் - என்சரிதம்
8. இரட்டுறமொழிதல் என்றால் - சிலேடை
9. நாலடியார் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
10. தாயுமானவரின் தந்தை பெயர் - கேடிலியப்பர்
11. முத்தே பவளமே என்ற வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றது - தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
12. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் - கி.பி.18
14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்
15.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் - ராமலிங்க அடிகள்
16. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் - மருதூர்
17. ராமலிங்கர் பின்பற்றிய நெறி - சன்மார்க்கநெறி
18. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்
19. அகத்து உறுப்பு யாது - அன்பு
20. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை - அன்பு இல்லாதவர்
21. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
22. உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
23. சடகோ எந்த நாட்டு சிறுமி - ஜப்பான்
24. உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
25. சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் - தோழி சிசு
26. ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் - அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
27. நாலடியாரை இயற்றியவர் யார் - சமண முனிவர் பலர்
28.  ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது  - நாலடியார்
29.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் -  பாட்டுக்கொரு புலவர்.
30. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் - 4 வகை
32. மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் - 2 வகை
33. தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் - 4 வகை
34. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13
35  சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று - மஞ்சள் சிட்டு.
36. நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது - பூ நாறை
37. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்
38. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி
39. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை
40. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்
41. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக
42. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை
43. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை
44. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்
45. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்
46. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - க.சச்சிதானந்தன்.
47.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.
48. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த  காலம் - கி.பி.2
49.  பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.
50 குறிஞ்சித் திரட்டு என்ற  நூலை எழுதியவர் -  பாரதிதாசன்
51.சுப்புரத்தினம் 'ஏர் கவி'  என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்
52. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது - 19
53. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் - பிரான்ஸ்
54. 'அளபெடை' எத்தனை வகைப்படும் - 2
55. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் -  5
56. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்  - 2
57. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் - வீரமாமுனிவர்
58. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது - சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
59. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் - கால்டு வெல்
60. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.

other links