tet books

time


follow me on fb

Friday, November 30, 2012

Group 1 தேர்வு தேதி மாற்றியமைக்கப்படும் - சனவரி 27 ஆக இருக்கலாம்.

Many have requested for change postponement of group one 2012 preliminary exam date scheduled on 30 th Dec .Commission has decided to postpone the exam to 27 th January 2013 as no other suitable earlier date is available. More time for candidates to prepare .we will come out with announcement

இது நடராஜ் சார் அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தி... Group 1 தேர்விற்காக தயாராக இரண்டு மாதங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... 

TNPSC VAO - Selection List Published

 

கீழ் காணும் லிங்கை கிளிக் செய்து வி.ஏ.ஓ ரிசல்டினை பார்க்கவும்... 

 

http://www.tnpsc.gov.in/results/vao2k12_seldoc.pdf

Tuesday, November 27, 2012

காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.

முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக எந்த தொகையை வந்து அடையும் என்பது இறுதி செய்யப்பட்ட காலிபணியிடங்களின் கணக்கெடுப்பிற்கு பிறகே தெரியவரும்.

இந்த நிலையில் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியவர்கள் கூறியதன் வாயிலாக இந்த மாதம் இறுதிக்குள் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போதுதான் காலிபணியிட விவரங்கள் திரட்டும் பணி நடைபெற்று வருவதால் ஒரு வாரம் காலதாமதமாகவே  இந்த பணிகள் நடைபெறும் என்பது ஊகிக்க முடிகிறது.

TET பற்றிய பலரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்பாட்டங்களை நடத்திவரும் வேலையில் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் பணியிடங்கள் அனைத்தும் சனவரி மாதத்தில் நிரப்பப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு முறையும் பணியிடங்களை நிரப்புவது சனவரி மாதத்தில் தான் நடைபெறுவதால் இந்த முறையும் சனவரி மாத்தில் பணியிடங்கள் நிரப்புதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

Sunday, November 25, 2012

Thursday, November 22, 2012

PG TRB வழக்கு நிலுவை விவரம் என்ன?

பல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

எப்படியோ... பிரட்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான்.

யாரோ ஒருவர் Applied Mathematics படித்து TRB ல் தேர்ச்சி பெற்று தற்போது வேலைகிடையாது என்று கேள்விபட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.

அதுமட்டும் அல்லாமல் எதற்காக 2:1 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கேள்விகள் எழுந்துள்ளதாம்.

இதுதான் இப்படி என்றால் TET க்கு ஏதோ ஒரு வழக்கை நீதி மன்றத்தில் தொடுத்துள்ளார்களாம் 4500 பேர் சார்பாக. ஆனால் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியதில் இந்த மாதம் இறுதிக்குள் Selection list வெளியிடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு ஒரு கேள்வி... ஒரு வேலையும் இன்னும் ஒழுங்காக போடப்படவில்லை இந்த 6 மாதத்தில் இப்போது போடப்பட்ட Steno Graph & typist பணியிடங்களில் கூட (Final tally steno called 1154 : allotted-507
Not qualified :418
absent:209 allotment letters sent to depts.selcted candidates will get appointment within seven days .they shd report to concerned dept.they have chosen) 

 இந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு ஒரு கேள்வி...ஏன் உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? ஆனா ஊனா ஏதாவது வழக்கை போட்டு ஆயிரக்கணக்கானோரின் வசைமாரிகளை ஏன் பெற வேண்டும்?

இந்த ஆண்டு முறை இல்லாவிட்டால் ... திறமை இருந்தால் அடுத்த முறை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்..

அது என்ன இப்படி ஒரு சந்தோசம் இப்படிபட்டவர்களுக்கு?

சகிப்புத்தன்மை பொறுமை இவற்றை இவர்கள் பள்ளியில் சொல்லிகொடுக்கவே போல தெரிகிறது.

சரி விடுங்க...  ஏதோ நடப்பதுதான் நடக்கும் நாமாவது பொறுமையாக இருப்போம்.

Tuesday, November 20, 2012

சமச்சீர் கல்வி - முழு பாடநூல்கள்

TET மற்றும் TNPSC தேர்விற்கு மிகவும் முக்கியமானது கடைகளில் கிடைக்கும் குப்பைகள் அல்ல சமச்சீர் புத்தகங்களே.


கீழ்காணும் லிங்குகளை கிளிக் செய்து 5 நொடிகள் காத்திருந்து வலது மேல் மூலையில் Skip Ad என்பதை அழுத்தினால் புத்தகங்கள் பதிவிறக்கம் ஆகும்.

முதல் வகுப்பு

தமிழ் பாடநூல்
ஆங்கிலம் பாடநூல்
கணிதம் பாடநூல்
சூழ்நிலையியல் பாடநூல்

இரண்டாம் வகுப்பு

தமிழ் பாடநூல்
ஆங்கிலம் பாடநூல்
கணிதம் பாடநூல்
சூழ்நிலையியல் பாடநூல்

மூன்றாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

நான்காம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஐந்தாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஆறாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஏழாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

எட்டாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஒன்பதாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

பத்தாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

பதினொன்றாம் வகுப்பு

தமிழ் புத்தகம் 
கணிதம் 1 பாகம்
கணித இரண்டாம் பாகம்    
தாவரவியல் முதல்
தாவரவியல் இரண்டு
வேதியியல் முதல்
வேதியியல் இரண்டு
வரலாறு
புவியியல்
இயற்பியல் ஒன்று
இயற்பியல் இரண்டு
விலங்கியல் ஒன்று
விலங்கியல் இரண்டு

பன்னிரண்டாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
கணிதம் பாகம் ஒன்று
கணிதம் பாகம் இரண்டு
தாவரவியல் முதல்
தாவரவியல் இரண்டு
தாவரவியல் மூன்று
தாவரவியல் நான்கு
வேதியல் ஒன்று
வேதியல் இரண்டு
புவியியல்
வரலாறு
இயற்பியல் ஒன்று
இயற்பியல் இரண்டு
விலங்கியல் ஒன்று
விலங்கியல் இரண்டு 
   
                             

Monday, November 19, 2012

இந்த வார வேலைவாய்ப்புகள்

நன்றி புதிய தலைமுறை கல்வி

Sunday, November 18, 2012

போட்டித் தேர்வுகள் - வெற்றி பெறுவது எப்படி?

‘நம் எண்ணங்களே செயல்களை தீர்மானிப்பவை‘


  1. முதலில் நம் எண்ணங்களை ஏதாவது ஒன்றின் மீது செலுத்துவது முக்கியமான ஒன்று
  2. தேர்ந்தெடுத்த பாதையின் கடினத்தன்மையை உணர்வது இரண்டாவது விடயம்
  3. கடினத்தன்மைக்கு ஏற்ப உழைப்பது மூன்றாவது விடயம்.


இந்த மூன்று விடயங்களையும் நாம் செய்யும் போது கூட நமக்கு எழும் குழப்பங்களும் பிரட்சனைகளும் ஏராளம்.

அவற்றில் ஒன்றுதான் எதை படிப்பது என்பதும் எப்படி படிப்பது என்பதும்.

எதை படிக்க வேண்டும் என்பதற்கு பதில் சொல்வது போட்டித் தேர்வுகளின் முந்தைய வினாத்தாள்களாகதான் அமையும்.

பொதுவாக TNPSC போன்ற மாநில அளவிலான தேர்வுகளுக்கு தயாராவதற்கு பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த துணையும் தேவை கிடையாது. அதுவும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாட புத்தகங்களையும் புரிந்து படித்தாலே போதும் 75 சதவிகித மதிப்பெண்களை அழகாக பெற்று விடலாம்.

TET போன்ற தேர்வுகளும் TNPSC தேர்வுகளை ஒத்தவையே அவற்றிற்கும் பாட நூல்களை தவிர மற்ற சந்தையில் கிடைக்கும் குப்பைகளை தேடி கண்டுபிடித்து வாங்கி பயன்படுத்துவது நாமாகவே நம் திறமையை குறைவாக எடைபோட்டுக் கொள்வதற்கு சமம்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒழுங்காக படித்த ஒருவனால் ஒரே பாய்ச்சலில் TET அல்லது TNPSC ஐ சமாளித்து வெற்றி பெற்று விட முடியும் என்பதுதான் என் கருத்து.

அறிதல் - புரிதல் எனும் இரண்டு திறன்கள் மட்டுமே போட்டித் தேர்வுகளில் கையாளப்படும் விடயங்கள். எனவே ஒவ்வொரு பக்கத்தினையும் பாட புத்தகத்தினில் படிக்கும் பொழுது நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் அதனை எந்தெந்த வகைகளில் வினாக்களாக வினவுவார்கள் என்பதை நம் மனதினால் ஒரு நோட்டம் இட்டுக்கொண்டே படிக்க வேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கு

மத்திய அரசு பணிகளில் பலர் ஆர்வம் காட்டுவதே கிடையாது காரணம் ஆங்கிலத்தில் வினாக்கள் இருக்குமே என்ற அச்சம்தான்.

அப்படி அல்ல இங்கு நாம் தமிழில் படித்தவைகளைதான் அவர்கள் ஆங்கிலத்தில் வினவுகின்றனர்.

நான் இந்த 4 மாத காலங்களில் 8 மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி இருக்கிறேன். அனைத்திலும் நான் கற்றுக்கொண்ட ஒரே விடயம் புதிதாக ஒன்றும் படிக்க தேவை இல்லை நம் முந்தைய அறிவை சோதிக்கும் விதமாக மட்டுமே வினாக்கள் வினவப்படுகின்றன என்பதுதான்.

பொது அறிவுகள் ஒவ்வொரு வேளைகளுக்கும் ஏற்ப வினவப்படும் அதாவது வங்கி தேர்வு என்றால் அதற்கேற்ப வங்கி சம்மந்தமான  பொது அறிவு வினாக்கள் வினவப்படும்

அது போல குற்ற புலனாய்வு துறை என்றால் நம் நாடு மட்டும் அல்லாமல் உலக அளவிளான வெளியுறவு போர் பற்றிய பொது அறிவு தகவல்கள் வினவப்படும்.

ரயில்வே துறை என்றால் அது தொடர்பான தகவல்கள் வினவப்படும்.

ஆனால் 60 சதவிகித கேள்விகள் நாம் பள்ளியில் படித்த விடங்களில் இருந்தே கேள்விகளாக அமையும் என்பதுதான் இதில் நாம் மகிழ வேண்டிய ஒன்று.

அது மட்டும் அல்லாமல் Mathematical Aptitude மற்றும் English knowledge ஆகியவற்றினை சோதிக்க அதிகமான வினாக்கள் வினவப்படுவது வாடிக்கை.

இதற்காக தனியாக நாம் Attitude மற்றும் Apptitude புத்தகங்களை சந்தையில் இருந்து வாங்கி பயன்படுத்துவது நன்மையாக அமையும்.

ஏனென்றால் கொடுக்கப்படும் குறைந்த நேரத்தில் அனைத்து கடினத்தன்மை கொண்ட வினாக்களையும் தீர்த்துவிட நமக்கு தேவை பயிற்சி மட்டுமே.

கணிதத்தில் கூட வினவப்படும் வினாக்கள் 3 படிகளில் விடை காணும் படியாகதான் இருக்கும் ஆனால் அதற்காக நாம் குறைந்தது 5 மாதங்களாவது பயிற்சி எடுத்துகொண்டோமானால் எந்த தேர்வினையும் அழகாக சமாளித்து விடலாம்.

கடைசியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான்... நாம் நினைத்தால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும்.. நம் நிறை குறைகளை முதலில் உணர்ந்து கொண்டு ... நிறைகளை மெருகூட்டியும் குறைகளை களைந்தும் செயல்பட்டாலே போதும் எவ்விதமான போட்டித் தேர்வுகளையும் சமாளித்து வெற்றி பெற்றுவிட முடியும்..

Sunday, November 4, 2012

TET -சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்வோருக்கான குறிப்புகள்



கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் நேற்றைய தினம் 03-11-2012 அன்று வெளியிடப்பட்டன.

நேற்றைய தினம் TRB வெப்சைட் பிஸியால் யாராலும் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் போய் விட்டது.

ஆனால் முடிந்த வரை இன்றே அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.


சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளானது உடனடியாக தொடங்க உள்ளது.

 Paper 2 : 8793 Candidates
Paper 1 : 10187 Candidates
Certificate Verification done in : 32 Districts
Certificate Verification Date:
Paper 2 C.V 06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
Paper 1 C.V 08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m

எனவே இடைநிலை உதவி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 08 மற்றும் 09 ஆம் தேதியில் நடைபெற உள்ளது.

மேலும் அதற்கு முன்னதாகவே  பட்டதாரி உதவி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 06 மற்றும் 07 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.


எனவே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்ல கீழ்காணும் லிங்கில் உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மையம் மற்றும் தேதி பற்றிய தகவலை முதலில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


பின்னர் கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து






மேற்கூரிய மூன்றினையும் தரவிறக்கம் செய்த பின்    அவற்றை A4 தாளில் பிரிண்ட் செய்து அதில் கேட்கபட்ட விவரங்களை பூர்த்தி செய்து வைத்துக்கொள்ளவும்.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு செல்ல இருப்பவர்கள் முன்னதாக தங்களின் Seniority ஐ உறுதி செய்ய தங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று இரண்டு வேலைவாய்ப்பு அட்டை நகல்களில் சான்றொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும். வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் போது கையோடு சாதிசான்றிதழ், இடைநிலைக்கல்வி சான்றிதழ் , மேனிலைக் கல்வி சான்றிதழ் , மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்ததற்கான அசல் சான்றிதழ்களை கையோடு தவறாமல் எடுத்துச் செல்லவும்.

தமிழ் வழியில் பயின்றோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக நீங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றொப்பத்தினை தனியாக நீங்கள் பயின்ற கல்வி நிறுவனங்ககளின் முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம்  பெற்றுக் கொள்ள வேண்டும்.  ( இளங்கலை படிப்பை தமிழில் முடித்தவர்களுக்கே 20 சதவிகித இட ஒதுக்கீடு என்று கூறப்படுகிறது. எனினும் ஒரு முன் எச்சரிக்கைக்காக தமிழ் வழியில் பயின்றததற்கான சான்றிதழை பயின்ற கல்வி நிறுவனங்களில் பெற்று வைத்துக்கொள்வது சிறப்பு)


சுய விவர படிவத்தில் DTEd என்பதற்கு தனியாக இடம் எதுவும் அளிக்கப்படாததால் அதை தனியாக ஒரு பட்டியலை பென்சிலில் போட்டு பூர்த்தி செய்து கொள்ளவும்.. அல்லது அதற்கான தனி படிவம் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.

இவற்றோடு... சான்றிதழ் சரிபார்ப்பு குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை வரிசை மாறாமல் அடுக்கி அவற்றின் இரண்டு நகல்களில் ஏதேனும் ஒரு A பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்.

இவைகளை சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு உங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கொண்டு சென்று சரியான நேரத்தில் சமர்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Friday, November 2, 2012

இன்று October TNTET 2012 Result ...

துணை ஆசிரியர் தகுதித் தேர்வு - அக்டோபர் 2012 தேர்வு முடிவுகள் இன்று 02-11-2012 இரவு 11 மணிக்கு கீழ் காணும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.

தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் -  10394

பட்டதாரி ஆசிரியர்கள் -  8849

http://trb.tn.nic.in/

  

other links