tet books

time


follow me on fb

Sunday, October 28, 2012

சென்ற TNTET தேர்வில் தேர்ச்சி அடைந்த D.T.Ed ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது


டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். 

 

எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். 

 

சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

 

சென்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் உறுதி ஆகிவிட்டது.

 

இந்த அக்டோபர் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மீதமுள்ள 3500 பணி இடங்களை நிரப்புவதில் போட்டா போட்டி ஏற்படும் என்பது தெரிய வருகிறது.

 

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அக்டோபர் 14 அன்று நடந்த ஆசிரியர் மறு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது.

Tuesday, October 23, 2012

இரட்டிப்பான PG TRB பணியிடங்கள் - மகிழ்ச்சியில் தேர்வான ஆசிரியர்கள்

PG - TRB நடத்தப்பட்டு கடந்த சூலை 27 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன

முடிவுகளில் சாதி அடிப்படையிலான பணி நியமனம் மற்றும் விடைகள் மறு ஆய்வு என நீடித்த வழக்கால் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில்  பணி நியமன தடையினையும் மறு மதிப்பீடு மற்றும் பணி நியமனமும் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி கடந்த 20 நாட்களாக நீடித்த இந்த மறு மதிப்பீடு முடிவடைந்து இன்று அக்டோபர் 23 - 2012 அன்று இதற்காக தேர்வானவர்கள் பட்டியல் TRB ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சென்ற மாதம் வெளியான தேர்வானவர்கள் பட்டியலை விட இரு மடங்காக தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாலும்... சென்ற தேர்வானவர் பட்டியலை விட குறைந்த Cut - off கொண்டவர்கள் உள்ளே செல்ல வாய்ப்பு கிடைத்ததாலும் தற்போது புதிதாக தேர்வான ஆசிரியர்கள் மத்தியில் பலத்த மகிழ்ச்சியை இது ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அடுத்த மாதம் நடப்பதாக இருந்த PG - TRB தேர்வு நடத்தப்படாது என்றே தெரிகிறது.

காரணம் இரு மடங்கானசான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இந்த தேர்விலேயே நடத்தப்படுகின்றன...


அதாவது சென்ற முறை வெளியான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் தற்போது இருமடங்கான பெயர்கள் இடம் பெற்றுள்ளன.. இதனால் சென்ற முறை தேர்வாகாது இந்த முறை தேர்வானவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 2:1 என்ற விகிதத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதா? அல்லது மொத்தமாக 6282 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படுமா என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.

புதிதாக தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இந்த மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதியில் நடக்க உள்ளது.



இனி TET பிரட்சனையையும்... இளநிலை ஆசிரியர் பணியிடங்களை எப்படி நெளிவு சுளிவுகளுடன் TRB கையாளப்போகிறது என்பதையும் இனி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Saturday, October 20, 2012

TRB ஆல் வெளியிடப்பட்டுள்ள Oct - TET 2012 விடைகள்

உங்கள் அலைபேசியில் பெறுங்கள் உடனுக்குடன் tntet2012.blog ன் sms ஐ... SMS " ON tntet2012 " to 9870807070



இந்த வலைபூ வேலைவாய்ப்பிற்கான ஒரு ஒருங்கிணைப்பு தளமாக செயல்பட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள்...

உங்கள் அலைபேசியில் இந்த தளத்தின் புது புது வெளியீடுகளை உடனுக்குடன் குறுந்தகவலாக பெற மற்றும் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற தற்போது தொடங்கப்பட்டுள்ளதே GOOGLE SMS சேவை

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


உங்கள் மொபைலில் இருந்து " ON tntet2012 "  என்று 9870807070 என்ற எண்ணிற்கு ஒரு sms அனுப்புங்கள் பிறகு பெறுங்கள் உடனுக்குடனான குறுந்தகவல் சேவையை அதுவும் தினமும் இலவசமாக...

 தினமும் புதுப்புது செய்திகளும் உங்களுக்கு தேவையான தகவல்களும் இதில் இடம் பெறுவதாக நீங்கள் நினைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

மிகக் குறைந்த காலத்திலேயே 3 மாதத்திலேயே... 60 ஆயிரம் பார்வையாளர்களை வெற்றிகரமாக இந்த தளம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதுமை - எளிமை - தனித்துவம் என்பதே இந்த தளத்தின் குறிக்கோள்

இனி வரும் காலங்களில் நீங்கள் பெரிதும் கவலைப்படும் இந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யும் சேவை தொடங்கப்படும்


Sunday, October 14, 2012

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 18ஆயிரத்து 932 பணியிடங்களும் நிரப்பப்படுவதில் சிக்கல் - புதிய வியூகத்தினை கையாள போகும் TRB...


டைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

இதில் தற்போது நடந்து முடிந்த அக்டோபர் TET தேர்வினில் முதல் தாளில் வினாக்கள் மிகவும் எளிமையாக அமைந்ததால் குறைந்தது 50,000 பேர் வரை தேர்ச்சி அடைவார்கள் என்று தெரிகிறது.

 

ஆனால் இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி நியமனம் Seniority அடிப்படையில் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண்ணும் கருத்தில் கொள்ளப்படும் என்ற இருநிலையான அறிவிப்புகள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

 

இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் Seniority பிரட்சனை என்றால்... பட்டதாரி ஆசிரியர் தேர்வில் சமூக அறிவியல் பாடம் தவிர்த்த மற்ற பாடங்களில் வினவப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாகவே இருந்தன...

 

இது சென்ற சூலை மாதம் நடந்த TET தேர்வினை விட கடினமானது என்றே தேர்வர்களால் பாவிக்கப்பட்டது .

 

இந்த சூழலில் தேவையான 18,932 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் அளவு ஆசிரியர்கள் தேர்வாகாத சூழலில் 5 சதவிகித மதிப்பெண்ணை குறைத்து .. அதாவது தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5 சதவிகிதமாக குறைத்து மேற்கொள்ள TRB முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

 

சென்ற தேர்விலேயே 750 பேர்தான் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வானார்கள்... அதை விட கடினமான வினா வினவப்பட்ட இந்த தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைபவர்கள் எண்ணிக்கை 2000 ஐ தாண்டாது என்றுதான் தோன்றுகிறது.

 

 

மீண்டும் மறுத் தேர்வு நடத்த TRB ஆல் முடியாது என்பதாலும் அறிவிக்கப்பட்ட பணி நியமனத்தினை வழங்க ஆவண உடனடியாக செய்ய வேண்டும் என்பதாலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் சில நெகிழ்வு சுளிவுகளை மேற்கொண்டாகும் என்பது இதன் மூலம் உறுதி...

 

 

எது எப்படியே... இந்த முறை அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியே ஆக வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வாணையத்தின் விதி... 

 

Friday, October 5, 2012

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு



கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதம் உயர்த்தி வழங்க வெளியான தகவலை தொடர்ந்து மாநில அரசும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்துக்ளது.

இதன்படி, 



தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  ‌பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர்.

 இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...  

other links