tet books

time


follow me on fb

Wednesday, July 31, 2013

விடை சாவிகளை தவறாக வெளியிட்ட TRB - அதிர்ச்சியில் தேர்வு எழுதிய ஆசிரியர்கள்

விடை சாவிகளை Answer Keys TRB - தன் இணைய தளத்தில் கடந்த 29 ஆம் தேதி மாலை வெளியிட்டது.

அதில் வேதியியல் பிரிவில் B பிரிவிற்கான விடை சாவிகளை 90 ஆம் கேள்வி முதல் தவறாக அச்சடித்து TRB வெளியிட்டது இதனால் குழப்பம் அடைந்த தேர்வு எழுதிய ஆசிரியர்கள் TRB இன் இந்த செயலால் மிகுந்த குழப்பம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் திருத்தபட்ட விடைகளை இன்று வெளியிட்டுள்ளது TRB.

திருத்தபட்ட விடை சாவிகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

பழைய வேதியில் விடை சாவியை காண இங்கே கிளிக் செய்யவும்.

நீங்கள் விடைகளை பரிசோதிக்கும் போது ஏதேனும் விடைகள் தவறானதாக கொடுக்கப்பட்டிருந்தால் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வாணைய முகவரிக்கு அஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம் . அல்லது தேர்வாணைய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்து விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Monday, July 29, 2013

இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்

வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

இதன் நேரடி தமிழாக்கம்...


மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.


ஆனால்...  இதை அப்படியே உபயோகித்தால் தேசிய கீதத்தின் ராகம் வரவில்லை என்பதால் சொல்லாடல்களை சுருக்கி... தேசிய கீதத்தின் உண்மையான பொருள் படும்படி அமைத்து...


மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே

இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி...


என ராகத்திற்கேற்ப பாடலை அமைத்து  28-07-2012 (ஞாயிறு ) அன்று Youtube ல் பதிவிட்டேன்.


இதற்கான இணைய இணைப்புகளை என் முகநூல் பக்கம் மற்றும் மின்னஞ்சல்களின் மூலமாக பகிர்ந்து கொண்டதின் மூலமாக பலருக்கு இந்த பாடல் அறிமுகமாகி உள்ளது.


தமிழாசிரியர் உயர்திரு. முத்துநிலவன் அவர்கள் அவரின் வலைபூ பக்கத்தில் http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_29.html இது சார்ந்த இடுகை ஒன்றினை பதிவிட்டுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழில் தேசிய கீதம்... இது தேசிய இந்திய தேசிய கீதமான (வங்க மொழி - ஜன கண மன) பாடலுக்கு என்றுமே ஈடாகாது... மற்றும் மாற்றும் கிடையாது...


மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும்.


என் சிறு வயதினில் இருந்தே தேசிய கீதத்தினை பாடும் போதெல்லாம் அதன் பொருள் புரியாமல் ஏதோ மனப்பாடமாக பாடுவதை போல பாடி இருக்கிறேன்.


இருப்பினும் பாடும் போது இருக்கும் தேசிய உணர்வும்... உத்வேகமும்... மன கிளர்ச்சியும் சொல்லில் அடங்காதவை.


அதை பொருள் உணர்ந்து பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நான் எண்ணி இருந்ததை மனதில் கொண்டே தேசிய கீத பாடலின் தமிழாக்கம் தேசிய கீத பாடலின் ராகத்தில் எழுதப்பட்டது.


மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக ஒன்றை பதிந்து கொள்ள விழைகிறேன்.



தமிழில் தேசிய கீதம்... இது தேசிய இந்திய தேசிய கீதமான (வங்க மொழி - ஜன கண மன ) பாடலுக்கு என்றுமே ஈடாகாது... மற்றும் மாற்றும் கிடையாது...

மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும் என்று நம்புகிறேன்.


(குறிப்பு : இது ஒரு ஆசிரியராக என் மாணவர்களுக்கு என தயாரிக்கப்பட்ட படைப்பு! இதற்கான MP4 வகையிலான வீடியோ பதிவினை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


தமிழாசிரியர் உயர்திரு. நா.  முத்துநிலவன்  அவர்களின் வலைபூ இடுகையில் இது பற்றிய கட்டுரையினை காண... வளரும் கவிதை: இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்







PG TRB கான உத்தேச விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு உள்ளன.

Friday, July 26, 2013

12 ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிகள் வெளியீடு

Thursday, July 25, 2013

செவிலியர் சான்றிதழ்களை தமிழக அரசின் செவிலியர் இணையத்தில் பதிவு செய்வது அவசியம்!

http://www.tamilnadunursingcouncil.com/

தமிழகத்தில் செவிலியராக பயிற்சி பெற்றவர்கள் அவர்களின் சான்றிதழ்களை மேற்கண்ட செவிலியர் கழகத்தின் இணைய தளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவு செய்வதும் புதுப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான வங்கி கட்டணம் 350 செலுத்து வேண்டும்.

வழிமுறைகள்
இந்தியன் நர்ஸிங் கவுன்சில் வழிகாட்டுதலின்படி ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயமாக்கட்டுப்பள்ளது. இது அனைத்து வகை நர்ஸிங் பதிவுகளுக்கும் பொருந்தும் (RN / RM / ANM – MPHW / HV) 21 ஆகஸ்ட் 1998 க்குப் பிறகு RN / RM பதிவு செய்தவர்கள் NM தெரிவு செய்து தங்கள் RN நம்பரை பதியவும்.
1. ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயம் செய்ய வேண்டும்.
2. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து தங்கள் வசதிக்காக அளிக்கப்பட்டுள்ள டெமோ வீடியோவை பார்க்கவும்.
3. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து கீழ்க்காணும் அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். ஸ்கேன் செய்த ஒவ்வொரு ஆவணங்களின் ஃபைல் சைஸ் 3MB க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் கீழே உள்ள அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்.
a. தங்கள் RN / RM / ANM – MPHW / HV சான்றிதழ்.
b. தற்போதைய உத்தியோகத்தின் வேலை நியமன சான்றிதழ்.
c. தங்கள் தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
d. அசல் சான்றிதழை ஸ்கேன் செய்யவும்.
4. தங்கள் TNNC எண் மற்றும் நர்ஸிங் பதிவு வகை (RN / RM / ANM – MPHW / HV) பதிவு செய்தவுடன், தங்கள் பெயர் காட்டப்படும். தங்கள் பெயர் காட்டப்படாவிடில், தயவு செய்து சரியான பதிவு வகையை தெரிவு செய்து மறுமுயற்சி செய்யவும் அல்லது 044 - 4352 4504 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
5. தங்கள் கட்டணத்தை ஆன்லைனிலோ (கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்) அல்லது ஆஃப்லைனிலோ செலுத்தலாம்.
6. ஆஃப்லைனில் செலுத்துவோர், தயவு செய்து மறக்காமல் செலான் அச்சடித்து எடுத்துக் கொள்ளவும்.
7. வங்கியில் ஒரு அடிச்சீட்டை வைத்துக்கொண்டு, 2 அடிச்சீட்டை தங்களிடம் அளிப்பார்கள். தாங்கள் 2 அடிச்சீட்டையும் தங்களிடமே வைத்துக்கொள்ளவும். கவுன்சிலுக்கு அனுப்ப தேவையில்லை.
8. தயவு செய்து ஒப்புதல் அட்டையை மறக்காமல் அச்சடித்துக்கொள்ளவும்.
9. ஆஃப்லைன் கட்டணம் செலுத்துவோர், தயவு செய்து தங்கள் பதிவு புதுப்பித்தலை காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மாத்திரம் புதுப்பிக்கவும்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Tuesday, July 23, 2013

சுதந்திர தின - பள்ளி பாடல்கள்... ஆசிரியரின் சொந்த படைப்பு...


(பாடல் – 1 சொல்லிடும் போது)
ஜன கண மன என சொல்லிடுவோம்!
ஜனங்களை மனங்களால் எண்ணிடுவோம்!
வந்தே மாதரம் என்றிடுவோம்!
வளங்களும் நலங்களும் பெற்றிடுவோம்!
தாயின் மணிக்கொடி பார்த்திடுவோம்!
தாய் நாட்டின் மகிமையை உணர்ந்திடுவோம்.!
ஆங்கிலேயன் கைதனிலே
அடிமைபட்ட நம் நாட்டை
அல்லும் பகலும் போராடி
அண்ணலும் பலரும் கைகோர்த்து.....

துன்பம் கொடுமை பல கொண்டு
துவண்டிடாமல் துணிந்து நின்று....
பெற்று தந்த சுதந்திரத்தை
பேணிக்காப்போம் என்றென்றும்!


(பாடல் – 2 ஜன கண மன தமிழாக்கம்)

மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி...




பாடல் – 3 ( இந்தியா இந்தியா )

இந்தியா! இந்தியா ! 
என் தேசமே என் நேசமே

வேற்றுமையில் ஒற்றுமையை
கொண்டதுதான் என் தேசம்
என்றென்றும் குறையாது
என் நாட்டின் மீதுள்ள நேசம்

அகிம்சையினை உலகினுக்கே
அறிமுகம் செய்த நாடிது
அன்பினிலும் பண்பினிலும்
அலை கடலின் மறு பதிவிது.

வறுமையெல்லாம் வளமையாக
மாறுவது எப்போது?
தீமையெல்லாம் நன்மையென
மாறிடுமே அப்போது!


நாட்டிலுள்ள மக்களெல்லாம் 
நலமுடனே வாழ வேண்டும்!- அதற்கு
நல்லவர்கள் வல்லவர்கள்
நாட்டினை ஆள வேண்டும்


கல்வி கற்று உயர்ந்திடுவேன்
கலங்கரை விளக்காய் திகழ்ந்திடுவேன்
நாளைய தலைவன் நானாவேன்
நன்மைகள் பலவும் செய்திடுவேன்..

இந்தியா இந்தியா...
என் தேசமே என் நேசமே!

            இரா. ஜெகநாதன்
            உதவி இ.நி.ஆசிரியர்
            புதுகரிகாத்தூர்.

Tuesday, July 16, 2013

இந்த வார வேலை வாய்ப்புகள் - சூலை மத்திய வாரம்










சென்ற வார வேலை வாய்ப்புகள்





சென்ற வார வேலைவாயப்புகள்


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். 23 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.07.2013
விவரங்களுக்கு:http://www.iocl.com/


ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள்
ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ. அல்லது ஐ.சி.டபுள்யூ.ஏ. தேர்ச்சி அல்லது ஃபுட் சயின்ஸ், ஃபுட் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல், பயோ டெக்னாலஜி, சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
28 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2013
விவரங்களுக்கு:http://www.fcijobsportal.com/


கெயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள்
கெயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், டீசல் மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலெக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2013
விவரங்களுக்கு: http://www.gail.nic.in/final_site/index.html
 


தமிழ்நாட்டில் இயங்கி வரும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் 1,339 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் அல்லது மார்க்கெட்டிங்/ மேனேஜ்மெண்ட் துறையில் டிப்ளமோ சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். கணினியை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களில் யாரேனும் எல்.ஐ.சி.  நிறுவனத்தில் வேலை செய்தாலோ, ஏஜெண்டாக இருந்தாலோ இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
காலியிடங்கள்: சென்னை-1:168, சென்னை-2 :  275, கோவை : 63, மதுரை:  87, சேலம் : 70, திருநெல்வேலி : 247, திருச்சி : 263, வேலூர் : 166

விண்ணப்பிப்பது எப்படி?.

1.www.licindia.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, Careers என்று குறிப்பிட்டிருக்கும் பிரிவை கிளிக் செய்யவும். அதில் ENGAGEMENT OF DIRECT SALES EXECUTIVES பிரிவுக்குள் இருக்கும் விண்ணப்பத்பை் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2.பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பத்தைப் பயன்படுத்தி, அருகில் இருக்கும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100/-ஐ  செலுத்த வேண்டும் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).

3. கட்டணம் செலுத்திய ரசீதை பத்திரமாக வைத்திக்கொள்ள வேண்டும். ரசீது இருந்தால் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படும்.

4.கட்டணம் செலுத்திய பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி:     06.07.2013

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2013

விவரங்களுக்கு:http://www.licindia.in/

Sunday, July 14, 2013

TNPSC Group 4 விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று.

http://tnpscexams.net/


புதிதாக விண்ணப்பிப்பவர்கள் புகைப்படத்தினை உள்ளீடு செய்ய கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து அதில் உள்ள psd file ல் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை இணைத்து


புகைப்படம் என்றால் 20-50 KB அளவிலும்

கையொப்பம் என்றால் 10-20 KB அளவிலும் வைத்து

உள்ளீடு செய்யவும்..


photo.psd


sign.psd

பெருந்தலைவர் காமராசர் 111 பிறந்தநாள் இன்று



கல்வி வளர்ச்சி நாளான காமராசர் பிறந்த தினம் இன்று...

இன்று கர்ம வீரர் என்று அழைக்கபடும் காமராஜின் பிறந்த தினம். பலருக்கு காமராஜை பற்றி தெரிந்திருந்தாலும் என்னை பொருத்தவரை எனக்கு தெரிந்த காமராஜை பற்றிய விஷயம் - இவர் ஒரு ஆண் சரஸ்வதி கடவுள். கல்விக்கு சரஸ்வதி கடவுளாக கற்பனையில் சித்தரித்த முன்னோர், இவர் ஒரு வாழும் உதாரணமாக இருந்தவர். "படிச்சவனா இருந்தா உனக்கு தெரிந்திருக்கும்" படிச்சவன் மாதிரியா நடந்துக்குறே" மெத்த படித்தவர்" அப்படின்னு ஒரு மாயையை உருவாக்கிய சில ஆரிய சக்திகளின் பொய்யை உடைத்தெரிந்தவர். இதை நான் விரும்பியோ விரும்பாமலோ சொல்ல காரணம் குல கல்வி முறையை மாற்றி - பொது கல்வி முறையை கொண்டு வந்த படிக்காத மேதை. பிறந்தது 1903 ஆம் ஆண்டு பள்ளிக்கு முதன் முதலாய் சென்றது 1908 ஆம் ஆண்டு கல்வியை முடித்தவர் 1914 ஆம் ஆண்டு ஆம் வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே படித்து பின்பு மானிலத்தை ஆளும் தகுதியை மற்றும் பெறவில்லை உலகளவில் இந்தியாவின் பெஸ்ட் கேம்பஸ் என பெயரெடுத்த "ஐ ஐ டி" மெட்ராஸை துவக்க காரணமாய் இருந்தவர். ராஜாஜி காலத்தில் 12,000 பள்ளிகூடங்களாக இருந்தது 6000 பள்ளிகூடங்கய குறைந்த போது அந்த 6000 பள்ளிகளையும் திறக்க வைத்த ஒரு மகான். அது மட்டுமல்ல 27,000 பள்ளீயாய் உயரவைத்தார்.

உலகத்திலேயே முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொன்டு வந்த ஒரு மாபெரும் தலைவரின் இந்த முயற்ச்சிக்கு காரணம் பள்ளி படிப்பு படிக்க முடியாமல் போன காரணமும், பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்றால் அது மிகையல்ல.180 நாட்கள் மட்டுமே பள்ளீ நாட்களாக இருந்த காலத்தில் 200 - 210 நாட்களாக வேலை நாட்களை உயர்த்தி தேவையில்லாத விடுமுறை நாட்களை குறைத்து அதிக அட்டென்டன்ஸ் மற்றூம் அதி நவீன சிலபஸ்களையும் கொண்டு வந்தவர். நம் நாடு பொருளாதாரம் 1980 களில் இருந்து உயர்ந்த ஒரே காரணம் இவர்தான். ஆம் 7%சதவிகித கல்வியறிவாக இருந்த மானிலத்தை பிரிட்டிஷ் போன பிறகு 37% உயர்த்தி காட்டிய ஒரு உத்தமனின் பிறந்த நாள் இன்று. தென்ன்கத்து மகாத்மா என்று கூறினாலும் அது மிகையாகது. இவரின் பாரத் ரத்னா பெற 100% தகுதியான ஒரு அரசியல் கிங்மேக்கர் ஏழை மக்களுக்கு கர்மவீரராக உயர்ந்தவர். நான் அவரின் இலவச கல்வியோ அல்லது மதிய உணவோ உட்கொள்ளாமல் இருந்திருந்தாலும் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த என் குடும்பத்தின் எதாவது ஒரு உறுப்பினர் இதில் பயனடந்து இருப்பார்கள் என உறுதியாக நினைக்கிறேன்.

அவர் முதலமைச்சர் என்ற மமதையே இல்லாமல் வாழ்ந்த‌ சில நினைவலைகள் - அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில், முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’ என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி...

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச்சொன்னார் வீட்டிலுள்ளவர்களை.. அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள். மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை…அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3 பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்.? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. முதல்வர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது. முதரல்வரின் அறையில் உள்ள சோஃபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா என்கிறார். ஆமாங்க ஐயா., நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார். மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்பு பண்ணீட்டன் தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே.... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’ னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்’ என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க’-ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார். ஒரு ஏழையின் கண்ணீர் வலி… இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்..!!!அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தில் லிஃப்ட்டில் பயணம் செய்தார்..லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னைவேலைக்கு வர வேண்டாமென்று சொன்னதாய் முறையிட்டு வருந்தினான். அவர் அரசாணையைக் காட்டினார். அவனை விட குறைவா படிச்ச நான் முதலமைச்சரா இருக்கலாம், எட்டாவது படிச்ச பையன் லிஃப்ட் பொத்தானை அமுக்கக் கூடாதாண்ணேன்! சட்டத்தை மாத்துங்கண்ணேன்!”

சொன்னவர் பெருந்தலைவர் காமராஜரே தான்

other links