tet books

time


follow me on fb

Saturday, December 8, 2012

தீர்க்கமான ஆன்லைன் கலந்தாய்வு வழிமுறைகள் - சிறப்பு செய்தி by, Mr.S.Murugavel M.sc.,B.Ed

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு. 

அறிவிப்பினை காண இங்கே சொடுக்கவும் 


புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார்.
15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதியபட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரலாம். காலியிட விவரங்களில் அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
பணியிடங்களைத் தேர்வு செய்த பிறகு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு...
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

http://jobs-trb.blogspot.in/2012/12/blog-post_8.html#links 

 நன்றி. http://www.teachertn.com/2012/12/tet-appointment-counselling-preparations.html

 கலந்தாய்வு நடைபெற உள்ள இடங்கள்...

சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு

கோவை: பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, RSS புரம்

திண்டுக்கல் : OUR Lady மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு

ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி


காஞ்சிபுரம்: Dr. V.S. ஸ்ரீநிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி

கன்னியாகுமாரி : SLP மேல்நிலைப்பள்ளி

கரூர் : பசுபதி ஈஸ்வர நகரமன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி

கிருஷ்ணகிரி : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

மதுரை: இளங்கோ நகராட்சி மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்

நாகப்பட்டினம் : கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகூர்

நாமக்கல் : தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி

பெரம்பலூர் : தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மேல்நிலைப்பள்ளி

ராமநாதபுரம் :சையத்தம்மாள் மேல்நிலைப்பள்ளி

சேலம் : சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, நான்கு ரோடு

திருவாரூர் : கஸ்தூரி பாய் காந்தி மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி

திருவள்ளூர் : ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப்பள்ளி

திருப்பூர் : ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி

திருச்சி : அரசு சையத்முதுசா மேல்நிலைப்பள்ளி

திருநெல்வேலி : சேப்டர் மேல்நிலைப்பள்ளி

விருதுநகர் : KVS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

அரியலூர் : அரசு மேல்நிலைப்பள்ளி

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும் மாவட்டங்கள் :
(கீழ்காணும் மாவட்டங்களுக்கும் வேறு கலந்தாய்வு இடங்கள்
அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)

கடலூர், தர்மபுரி,புதுக்கோட்டை , ராமநாதபுரம், சிவகங்கை , தஞ்சை,
நீலகிரி, தேனி , திருவண்ணாமலை , தூத்துக்குடி , வேலூர் , விழுப்புரம் 

நன்றி  http://www.tamilagaasiriyar.com/2012/12/blog-post_3198.html

தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறை கடிதம் காண இங்கே சொடுக்கவும் 



TRB - TET - ONLINE கலந்தாய்வு எந்த மாவட்டத்தில் கலந்துக்கொள்வது ?

பட்டதாரி ஆசிரியர்கள் :

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை TET தேர்விற்கு நீங்கள் அளித்த வீட்டு முகவரியே (Communication Address) உங்களுடைய முகவரியும் மாவட்டமும் ஆகும். அதாவது உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மாவட்டமே உங்கள் மாவட்டமாகும். அந்த மாவட்ட கலந்தாய்வில் தான் தாங்கள் கலந்து கொள்ளவேண்டும். உங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மாவட்டத்தை பொருட்படுத்த தேவையில்லை.

இடைநிலை ஆசிரியர்கள்:

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.

 

  வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்குஅழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம்

விழா நேரம் மாற்றம் : 
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னைஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால்,பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,..
பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முடிவு, 4ம் தேதி வெளியிட்ட நிலையில், ஒரே வாரத்தில், 13ம் தேதி, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில், அதிக பணியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல் முறை.
கலந்தாய்வு விவரம் : குறுகிய காலத்தில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, "ஆன்-லைன்' மூலம், பணி நியமன கலந்தாய்வை நடத்த, ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்றுள்ள, 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று, மாவட்டத்திற்குள், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. 32மாவட்டங்களிலும், தேர்வு செய்யப்பட்ட மையங்களில் கலந்தாய்வு நடக்கிறது. நாளை, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நடக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இடைநிலை ஆசிரியர் : இதேபோல், தொடக்க கல்வித் துறையில், 9,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வு இடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வேறு மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
" டோர் டெலிவரி' : கலந்தாய்வு நடக்கும் விவரங்களை, ஆசிரியர் வேலைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு, பல்வேறு முறைகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். நாளிதழ்கள், "டிவி' சேனல்கள் மூலம், கலந்தாய்வு விவரங்களை தெரிவித்ததுடன், தேர்வர்களின் அலைபேசி எண்களை பயன்படுத்தி, நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பணிபுரியும் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, கலந்தாய்வு கடிதங்களை நேரடியாக வழங்கவும்ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நேற்று, ஆசிரியர்கள் பல பகுதிகளுக்குச் சென்று, தேர்வு பெற்றவர்களின் வீட்டு கதவை தட்டி,"வாழ்த்துக்கள் மேடம்; வாழ்த்துக்கள் சார்' என, தெரிவித்து, கலந்தாய்வு கடிதங்களை வழங்கினர். திடீரென ஆசிரியர்கள், வீடுகளுக்கு வந்து கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கியது, தேர்வு பெற்றவர்களை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

11 comments:

  1. all sec.grade teacher will be got posting?

    ReplyDelete
  2. RESPECTED MURUVEL SIR KINDLY PROVIDE UR MOBILE NO AND MAIL ID.I NEED TO TALK YOU.I AM WAITING FOR UR REPLAY.
    THANKING YOU

    ReplyDelete
  3. my mail id murugavel213@gmail.com
    blogspot: jobs-edn.blogspot.com

    ReplyDelete
  4. சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு

    கோவை: பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, RSS புரம்

    திண்டுக்கல் : OUR Lady மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு

    ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி


    காஞ்சிபுரம்: Dr. V.S. ஸ்ரீநிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி

    கன்னியாகுமாரி : SLP மேல்நிலைப்பள்ளி

    கரூர் : பசுபதி ஈஸ்வர நகரமன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி

    கிருஷ்ணகிரி : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

    மதுரை: இளங்கோ நகராட்சி மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்

    நாகப்பட்டினம் : கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகூர்

    நாமக்கல் : தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி

    பெரம்பலூர் : தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மேல்நிலைப்பள்ளி

    ராமநாதபுரம் :சையத்தம்மாள் மேல்நிலைப்பள்ளி

    சேலம் : சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, நான்கு ரோடு

    திருவாரூர் : கஸ்தூரி பாய் காந்தி மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி

    திருவள்ளூர் : ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப்பள்ளி

    திருப்பூர் : ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி

    திருச்சி : அரசு சையத்முதுசா மேல்நிலைப்பள்ளி

    திருநெல்வேலி : சேப்டர் மேல்நிலைப்பள்ளி

    விருதுநகர் : KVS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

    அரியலூர் : அரசு மேல்நிலைப்பள்ளி

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும் மாவட்டங்கள் :
    (கீழ்காணும் மாவட்டங்களுக்கும் வேறு கலந்தாய்வு இடங்கள்
    அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)

    கடலூர், தர்மபுரி,புதுக்கோட்டை , ராமநாதபுரம், சிவகங்கை , தஞ்சை,
    நீலகிரி, தேனி , திருவண்ணாமலை , தூத்துக்குடி , வேலூர் , விழுப்புரம்

    ReplyDelete
  5. வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்குஅழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம்
    விழா நேரம் மாற்றம் :
    சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
    மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னைஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால்,பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,..
    பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முடிவு, 4ம் தேதி வெளியிட்ட நிலையில், ஒரே வாரத்தில், 13ம் தேதி, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில், அதிக பணியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல் முறை.
    கலந்தாய்வு விவரம் : குறுகிய காலத்தில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, "ஆன்-லைன்' மூலம், பணி நியமன கலந்தாய்வை நடத்த, ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்றுள்ள, 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
    இன்று, மாவட்டத்திற்குள், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. 32மாவட்டங்களிலும், தேர்வு செய்யப்பட்ட மையங்களில் கலந்தாய்வு நடக்கிறது. நாளை, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நடக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.
    இடைநிலை ஆசிரியர் : இதேபோல், தொடக்க கல்வித் துறையில், 9,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வு இடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வேறு மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
    " டோர் டெலிவரி' : கலந்தாய்வு நடக்கும் விவரங்களை, ஆசிரியர் வேலைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு, பல்வேறு முறைகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். நாளிதழ்கள், "டிவி' சேனல்கள் மூலம், கலந்தாய்வு விவரங்களை தெரிவித்ததுடன், தேர்வர்களின் அலைபேசி எண்களை பயன்படுத்தி, நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பணிபுரியும் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, கலந்தாய்வு கடிதங்களை நேரடியாக வழங்கவும்ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நேற்று, ஆசிரியர்கள் பல பகுதிகளுக்குச் சென்று, தேர்வு பெற்றவர்களின் வீட்டு கதவை தட்டி,"வாழ்த்துக்கள் மேடம்; வாழ்த்துக்கள் சார்' என, தெரிவித்து, கலந்தாய்வு கடிதங்களை வழங்கினர். திடீரென ஆசிரியர்கள், வீடுகளுக்கு வந்து கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கியது, தேர்வு பெற்றவர்களை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

    ReplyDelete
  6. TRB - TET - ONLINE கலந்தாய்வு எந்த மாவட்டத்தில் கலந்துக்கொள்வது ?
    பட்டதாரி ஆசிரியர்கள் :
    பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை TET தேர்விற்கு நீங்கள் அளித்த வீட்டு முகவரியே (Communication Address) உங்களுடைய முகவரியும் மாவட்டமும் ஆகும். அதாவது உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மாவட்டமே உங்கள் மாவட்டமாகும். அந்த மாவட்ட கலந்தாய்வில் தான் தாங்கள் கலந்து கொள்ளவேண்டும். உங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மாவட்டத்தை பொருட்படுத்த தேவையில்லை.
    இடைநிலை ஆசிரியர்கள்:
    இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை எந்த மாவட்டத்தில் நீங்கள் உங்கள் ஆசிரியர் பயிற்சி கல்வித்தகுதியினை எந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளீர்களோ, அந்த மாவட்டம் தான் நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டிய மாவட்டமாகும். இதில் வீட்டு முகவரியை (Communication Address)பொருட்படுத்த தேவையில்லை .

    ReplyDelete
  7. முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.

    ReplyDelete
  8. முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.
    தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 / 2012, நாள்.09.12.2012 பதிவிறக்கம் செய்ய...

    ReplyDelete
  9. டி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு,இதில் 6,500 பேருக்கு, அதிர்ஷ்டம்அடித்தது. இவர்கள் அனைவருக்கும், அவரவர் சொந்தஊர்களிலேயே வேலை கிடைத்தன.
    டி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்' வழியில், மாநிலம் முழுவதும் நேற்று சுறுசுறுப்பாக நடந்தது. 8,718 பேரில், 6,500 பேருக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. இவர்கள் அனைவருக்கும், அவரவர் சொந்த ஊர்களிலேயே வேலை கிடைத்தன. டி.இ.டி., தேர்வில், 9,664 இடைநிலைஆசிரியர், 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் என, 18 ஆயிரத்து, 382 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவருக்கும், மூன்று நாள் பணி நியமன கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர், சொந்த மாவட்டத்தில், பணி பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று, "ஆன்-லைன்' வழியில் நடந்தது. சென்னை மாவட்டத்தில், எந்த பாடத்திலும், காலி பணியிடங்கள் இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கணிதம் பாடத்தை தவிர, இதர பாடங்களில், கணிசமான அளவிற்கு, காலி இடங்கள் இருந்தன. தர்மபுரியில் அதிகம்: தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், அதிகளவில் காலி பணியிடங்கள் இருந்தன. தர்மபுரியில் மட்டும், 800 பணியிடங்கள் காலி. நேற்று பிற்பகல் முதல், கலந்தாய்வு நடந்தது. சொந்த மாவட்டங்களில், அதிக காலியிடங்கள் இருந்ததால், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, மாலை, 6:30 மணிக்குள், 6,418 பேர், அவரவர் சொந்த ஊர்களிலேயே, பணியிடங்களை தேர்வு செய்தனர்.
    ஆசிரியர்கள் குஷி :பட்டதாரி ஆசிரியர் மொத்த பணியிடங்களில், 73.61 சதவீதம் பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே வேலை செய்யும் அதிர்ஷ்டம் அடித்ததால், புதிய ஆசிரியர் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: அதிகமானோருக்கு, சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்து விட்டன. 2,000 பேர் மட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
    கணித பாடத்தை தவிர, இதர பாடங்களில், காலி பணியிடங்கள் அதிகம் உள்ளன.
    இன்றைய கலந்தாய்வு :எனவே, சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165 பேரும், திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில், பணியில் சேரலாம்.இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த காலி பணியிடங்கள், ஒளிவு மறைவின்றி,"ஆன்-லைன்' வழியில் காட்டப்பட்டன.சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வு பெற்றவர்கள், மேற்கண்ட இடங்களில் உள்ள பள்ளிகளை, "ஜாக்பாட்' அடித்ததுபோல், மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தனர்.இரண்டாவது நாளான இன்று, பட்டதாரி ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்தில் இருந்து, வெளிமாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. நேற்று, சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத ஆசிரியர்கள், இன்றைய கலந்தாய்வில் பங்கேற்பர்.
    நாளை...:
    தொடக்க கல்வித்துறையில், 9,664 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடந்த இடங்களிலேயே, இந்த கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனமும், பிற்பகலில், வெளி மாவட்டங்களுக்கான பணி நியமனமும் நடக்கிறது.இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதிகளவில், சொந்த மாவட்டங்களிலேயே, வேலை கிடைப்பதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    பணி நியமனம் :
    நாளையுடன், 18 ஆயிரத்து, 382 பேர் பணி நியமனத்திற்கான பணிகளும் முடியும். அதைத் தொடர்ந்து, 13ம் தேதி, சென்னையில்நடக்கும் விழாவில், 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார்.

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links