tet books

time


follow me on fb

Saturday, June 8, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்:

அனைத்து அரசு மேல்நிலைபள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை ( திங்கட்கிழமை ) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன .

 விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17– ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் .

ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8– ம் வகுப்பு ரையுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது .

 அதன்படி , 23.8.2010 முதல் இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழக அரசு , தகுதித்தேர்வை கட்டாயமாக்கி உள்ளது .

 கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் எழுதினர் . மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள் . தகுதித்தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும் .

12 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது .

அதன்படி , இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17– ந்தேதியும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18– ந்தேதியும் நடத்தப்படுகிறது .


 தகுதித்தேர்வை இந்த முறை 7 லட்சம் ஆசிரியர்கள் எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது . இதை கருத்தில் கொண்டு 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன .

 விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது . விண்ணப்பங்கள் விற்பனை மையங்களுக்கு நாளை ( திங்கட்கிழமை ) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன .


எப்போது கிடைக்கும் ? 

தகுதித்தேர்வு விண்ணப்ப படிவங்கள் 17– ந்தேதி முதல் ஜூலை 1– ந்தேதி வரை விற்பனைக்கு கிடைக்கும் .

 விண்ணப்ப கட்டணம் ரூ .50. தேர்வுகட்டணம் ரூ .500. ஆதி திராவிடர் , பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ .250 மட்டும் . பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 1– ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ( டி . இ . ஓ . ஆபீஸ் ) சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது .

தற்போதைய தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 13 ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும் , 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது .

 இந்த ஆண்டு நடுநிலைப்பள்ளிகளாகவும் , உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு தேர்வுக்கு முன்பாக அரசு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அந்த காலி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர் .

தேர்வு முறை இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில் , தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவுமூப்பு ( சீனியாரிட்டி ) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள் .

 பட்டதாரி ஆசிரியர்கள் , தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் –2, பட்டப்படிப்பு , பி . எட் . மதிப்பெண் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

அவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் 60– க்கு மாற்றப்படும் . பிளஸ் –2 மதிப்பெண் தகுதிக்கு அதிகபட்சம் 10 மார்க்கும் , இளங்கலை பட்டப்படிப்புக்கு 15 மார்க்கும் , பி . எட் . படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஆக மொத்தம் 40 மார்க் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது . இரண்டையும் சேர்த்து 100– க்கு ‘ கட் ஆப் மார்க் ’ எவ்வளவு ? என்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் .

2 comments:

  1. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர் . ?????????????????

    ReplyDelete
    Replies
    1. கலந்து கொண்டனர்...

      Delete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links