tet books

time


follow me on fb

Thursday, December 6, 2012

அதிரடியாய் நடக்கும் - ஆசிரியர் பணியிட கலந்தாய்வு ஏற்பாடுகள் - டிசம்பர் 13 ல் கலந்தாய்வு

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்ச்சி அடைந்துள்ள ஆசிரியர்களுக்கு பணியிட கலந்தாய்வு வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நடக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இறுதி கட்டமாக வரும் திங்கட்கிழமை 10 ஆம் தேதி சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி கட்டமாக நடத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து டிசம்பர் 13 வியாழன் அன்று ( நிறைந்த அமாவாசை தினம்) ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் SSA மையங்களில் ஆன்லைன் மூலமாக பணியிட கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆன்லைன் மூலமான கலந்தாய்வு என்பதால் துரிதமாகவும் எளிமையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1:30 என்ற அடிப்படையில் மாற்றமாவதால் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 400 காலி பணியிடங்கள் வீதம் 10 ஆயிரம் அளவிற்காவது பணியிடங்கள் நிரப்பபட வாய்ப்புகள் உள்ளன.


இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே முதல்கட்டமாக வரும் டிசம்பர் 13 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் தெரியவரும்.

இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் விவரம் மற்றும் நடப்பாண்டில் நிரப்பப்பட வேண்டிய விவரம்

நடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள்
உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.


பணியிடங்களின் புள்ளிவிவரம் அளித்தவர் திரு. S.Murugavel M.sc.,B.Ed அவர்கள். நன்றி சார்.

 ஒரே நாளில் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படுமா?  

வேறு மாவட்டங்களில் சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாமா?

என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். 

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். (advt) 

Wednesday, December 5, 2012

TET மீண்டும் ஒரு வாய்ப்பு - சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வராதோருக்கு.


ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகியவற்றின் மூலம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18,382 பேரின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் புதன்கிழமைமாலை வெளியிடப்பட்டது.இந்த இறுதிப் பட்டியலுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் 6 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இருந்தும் மறுதேர்வில் வெற்றி பெற்ற நிறைய பேர் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மற்றுமொரு வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் தாளில் வெற்றி பெற்றவர்களில் 449 பேரும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களில் 84 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை.மேற்கண்ட 533 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க

விரும்பினால், அதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மனுவை வழங்கலாம். அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து, சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை அறிவிக்கும்.47 பேருக்கு கடைசி வாய்ப்பு: சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் 47 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த 47 பேரும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு டிசம்பர் 10-ம்தேதி (திங்கள்கிழமை) உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.இதற்காக அன்றைய தினம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வரத் தவறினால் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது.சிறுபான்மை மொழிப்பாடங்களில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் தனியாக வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தேர்வு செய்யப்பட்ட 18 ஆயிரம் பேரையும் பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சில நாள்களில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நன்றி http://www.tnkalvi.com/2012/12/533.html?spref=fb 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணியிடங்கள் எவ்வாறு வழங்கப்படும்?

ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டாக பிரிக்கிறது TRB

1. ஆசிரியர் தகுதித் தேர்வு ( 12-07-2012 அன்று நடத்தப்பட்டது )
2. துணை ஆசிரியர் தகுதித் தேர்வு ( 14-10-2012 அன்று நடப்பத்தப்பட்டது)


முழுமையான விவரத்திற்கு கீழே உள்ள தினமணி நாளிதழின் செய்தியை காணவும்...



தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வானவர்கள் ( Selected - Yes ) என்பது சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதென்று TRB மூலம் கொடுக்கப்பட்டுள்ள சான்று மட்டுமே.

மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு - Employment Seniority மூலமும் 
பட்டதாரி ஆசிரிர்களுக்கு - வெயிடேஜ் மதிப்பெண் மூலமாகவும்

தகுதியான ஆசிரியர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உங்களின் தரவரிசை எண்ணை slno எனும் வரிசையின் கீழ் காணலாம். இது சாதி-periority = turn அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட எண் ஆகும்.

இதனை கொண்டே நீங்கள் மாநில அளவில் வேலைவாய்ப்பில் எத்தனையாவது இடம் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு கவலை இல்லை ஆனால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் தெளிவாக இவ்வளவுதான் என்பது பள்ளிக் கல்வித் துறையால் முடிவாக அறிவிக்கப்படவில்லை. 

எனவே தற்போது இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் தங்கள் slno ஐ பார்த்து வைத்துக் கொள்வது சிறப்பு அது 6000 அளவில் இருந்தால் வேலை உறுதி என்பதை தெரிந்து கொள்ளலாம்.  

ஏனென்றால் சென்ற முறை தேர்வானவர்கள் 1400 பேர் உள்ளனர். மொத்தமாக 7500 பணியிடங்களுக்கும் குறைவாகதான் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

அதையும் மீறி தேர்வானவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எல்லாம் அவன் செயல் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TRB ஐ இத்தனை நாளாக எதிர்பார்த்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் இனி வழி மேல் விழி வைத்து பார்க்க வேண்டியது பள்ளிக் கல்வித் துறையைதான்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.. 


எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்...


Monday, December 3, 2012

TNTET2012 - மார்க் வெயிடேஜ் முறையில் தேர்வானவர்களின் இறுதி பட்டியல் இன்று அல்லது நாளை வெளியீடு.

ஆசிரியராக பணியமர்த்தபடுபவர்களின் இறுதி பட்டியலை இன்று இரவு அல்லது நாளை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை இடம் கண்டு அவற்றிற்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் பணியிடங்களை ஒதுக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது

எனவே இறுதி முடிவாக சரியான தகுதிவாய்ந்தவர்கள் பட்டியலினை வெளியிடும் பணி இன்று அல்லது நாளை நடக்க உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.


இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்பட்டுள்ளதன் காரணம் என்ன?


  1. D.T.Ed தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1000 பேருக்கு B.Ed தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர்.
  2. ஏற்கனவே இடைநிலை ஆசிரியராக இருந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வினை பெற்றுள்ளனர்...
  3.  இலவச கட்டாய கல்வி சட்டப்படி 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விழுக்காடு 1:30 ஆக மாற்றபட உள்ளது.


இவற்றால்...  இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பட்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Saturday, December 1, 2012

இந்தவார வேலைவாய்ப்புகள்

நன்றி புதியதலைமுறை

Friday, November 30, 2012

Group 1 தேர்வு தேதி மாற்றியமைக்கப்படும் - சனவரி 27 ஆக இருக்கலாம்.

Many have requested for change postponement of group one 2012 preliminary exam date scheduled on 30 th Dec .Commission has decided to postpone the exam to 27 th January 2013 as no other suitable earlier date is available. More time for candidates to prepare .we will come out with announcement

இது நடராஜ் சார் அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தி... Group 1 தேர்விற்காக தயாராக இரண்டு மாதங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... 

TNPSC VAO - Selection List Published

 

கீழ் காணும் லிங்கை கிளிக் செய்து வி.ஏ.ஓ ரிசல்டினை பார்க்கவும்... 

 

http://www.tnpsc.gov.in/results/vao2k12_seldoc.pdf

Tuesday, November 27, 2012

காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.

முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக எந்த தொகையை வந்து அடையும் என்பது இறுதி செய்யப்பட்ட காலிபணியிடங்களின் கணக்கெடுப்பிற்கு பிறகே தெரியவரும்.

இந்த நிலையில் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியவர்கள் கூறியதன் வாயிலாக இந்த மாதம் இறுதிக்குள் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போதுதான் காலிபணியிட விவரங்கள் திரட்டும் பணி நடைபெற்று வருவதால் ஒரு வாரம் காலதாமதமாகவே  இந்த பணிகள் நடைபெறும் என்பது ஊகிக்க முடிகிறது.

TET பற்றிய பலரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்பாட்டங்களை நடத்திவரும் வேலையில் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் பணியிடங்கள் அனைத்தும் சனவரி மாதத்தில் நிரப்பப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு முறையும் பணியிடங்களை நிரப்புவது சனவரி மாதத்தில் தான் நடைபெறுவதால் இந்த முறையும் சனவரி மாத்தில் பணியிடங்கள் நிரப்புதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

Thursday, November 22, 2012

PG TRB வழக்கு நிலுவை விவரம் என்ன?

பல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

எப்படியோ... பிரட்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான்.

யாரோ ஒருவர் Applied Mathematics படித்து TRB ல் தேர்ச்சி பெற்று தற்போது வேலைகிடையாது என்று கேள்விபட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.

அதுமட்டும் அல்லாமல் எதற்காக 2:1 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கேள்விகள் எழுந்துள்ளதாம்.

இதுதான் இப்படி என்றால் TET க்கு ஏதோ ஒரு வழக்கை நீதி மன்றத்தில் தொடுத்துள்ளார்களாம் 4500 பேர் சார்பாக. ஆனால் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியதில் இந்த மாதம் இறுதிக்குள் Selection list வெளியிடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு ஒரு கேள்வி... ஒரு வேலையும் இன்னும் ஒழுங்காக போடப்படவில்லை இந்த 6 மாதத்தில் இப்போது போடப்பட்ட Steno Graph & typist பணியிடங்களில் கூட (Final tally steno called 1154 : allotted-507
Not qualified :418
absent:209 allotment letters sent to depts.selcted candidates will get appointment within seven days .they shd report to concerned dept.they have chosen) 

 இந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு ஒரு கேள்வி...ஏன் உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? ஆனா ஊனா ஏதாவது வழக்கை போட்டு ஆயிரக்கணக்கானோரின் வசைமாரிகளை ஏன் பெற வேண்டும்?

இந்த ஆண்டு முறை இல்லாவிட்டால் ... திறமை இருந்தால் அடுத்த முறை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்..

அது என்ன இப்படி ஒரு சந்தோசம் இப்படிபட்டவர்களுக்கு?

சகிப்புத்தன்மை பொறுமை இவற்றை இவர்கள் பள்ளியில் சொல்லிகொடுக்கவே போல தெரிகிறது.

சரி விடுங்க...  ஏதோ நடப்பதுதான் நடக்கும் நாமாவது பொறுமையாக இருப்போம்.

Tuesday, November 20, 2012

சமச்சீர் கல்வி - முழு பாடநூல்கள்

TET மற்றும் TNPSC தேர்விற்கு மிகவும் முக்கியமானது கடைகளில் கிடைக்கும் குப்பைகள் அல்ல சமச்சீர் புத்தகங்களே.


கீழ்காணும் லிங்குகளை கிளிக் செய்து 5 நொடிகள் காத்திருந்து வலது மேல் மூலையில் Skip Ad என்பதை அழுத்தினால் புத்தகங்கள் பதிவிறக்கம் ஆகும்.

முதல் வகுப்பு

தமிழ் பாடநூல்
ஆங்கிலம் பாடநூல்
கணிதம் பாடநூல்
சூழ்நிலையியல் பாடநூல்

இரண்டாம் வகுப்பு

தமிழ் பாடநூல்
ஆங்கிலம் பாடநூல்
கணிதம் பாடநூல்
சூழ்நிலையியல் பாடநூல்

மூன்றாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

நான்காம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஐந்தாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஆறாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஏழாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

எட்டாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஒன்பதாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

பத்தாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

பதினொன்றாம் வகுப்பு

தமிழ் புத்தகம் 
கணிதம் 1 பாகம்
கணித இரண்டாம் பாகம்    
தாவரவியல் முதல்
தாவரவியல் இரண்டு
வேதியியல் முதல்
வேதியியல் இரண்டு
வரலாறு
புவியியல்
இயற்பியல் ஒன்று
இயற்பியல் இரண்டு
விலங்கியல் ஒன்று
விலங்கியல் இரண்டு

பன்னிரண்டாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
கணிதம் பாகம் ஒன்று
கணிதம் பாகம் இரண்டு
தாவரவியல் முதல்
தாவரவியல் இரண்டு
தாவரவியல் மூன்று
தாவரவியல் நான்கு
வேதியல் ஒன்று
வேதியல் இரண்டு
புவியியல்
வரலாறு
இயற்பியல் ஒன்று
இயற்பியல் இரண்டு
விலங்கியல் ஒன்று
விலங்கியல் இரண்டு 
   
                             

Monday, November 19, 2012

இந்த வார வேலைவாய்ப்புகள்

நன்றி புதிய தலைமுறை கல்வி

other links